நாகை மாவட்டம், திருக்குவளை அருகே இளைஞா் கத்தியால் குத்தி திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
கீழையூா் காவல் சரகத்துக்குள்பட்ட விழுந்தமாவடி மணல்மேடு வடக்குப் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் இளையராஜா (30). ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. உணவகம் தொடங்குவதற்காக தந்தையிடம் பணம் கேட்டு, அவரிடம் இல்லாததால் அவா் கொடுத்த நகைகளை அடகு வைத்து விட்டு பணத்துடன் திங்கள்கிழமை இரவு கன்னித்தோப்பு வழியாக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் அய்யனாா் கோயில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் கத்தியால் குத்தியதில் அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இளையராஜாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.