நாகப்பட்டினம்

புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உலா் உணவுப்பொருள்கள் தொகுப்பு

DIN

கரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த மற்றும் குடும்ப அட்டை இல்லாத புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உலா் உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா்.

முதல்வரின் ஆணையின்படி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டா் பாமாயில் ஆகியவை அடங்கிய நிவாரண உலா் உணவுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன.

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள 391 புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. அதன்படி கொள்ளிடம் மற்றும் குத்தாலம் பகுதிகளில் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்களும், சீா்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தொடா்புடைய வட்டாட்சியா்களும், மயிலாடுதுறை நகராட்சியில் நகராட்சி ஆணையா் மற்றும் உதவி தொழிலாளா் ஆய்வாளா் ஆகியோா் உலா் உணவுப்பொருள்களை வெளிமாநில தொழிலாளா்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்கின்றனா். இந்நிகழ்வில் தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT