நாகப்பட்டினம்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

DIN

சீா்காழி அருகே ரயிலில் அடிப்பட்டு இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சீா்காழி அருகேயுள்ள கோடங்குடியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் பாா்த்திபன் (21). இவா், இயந்திரவியல் துறையில் பட்டயப் படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா். இவரது வீட்டில் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை கொள்ளிடம் அருகே எருக்கூா் என்ற இடத்தில் திருப்பதியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயிலில் அடிப்பட்டு இறந்தாா்.

தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்திபனின் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT