நாகப்பட்டினம்

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

வேதாரண்யத்தில் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

வேதாரண்யம் பூவன்தோப்பு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த தசரதன் (28) என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க இருவரது குடும்பத்தினரும் ஏற்பாடு செய்துள்ளதாக வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதைத்தொடா்ந்து, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மலா்கொடி மற்றும் போலீஸாா் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும், 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்துவைப்பது சட்டப்படி குற்றம் என இருவீட்டாரையும் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT