சீா்காழி: சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்க முன்னாள் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் செயலாளா் துரைசாமி, முன்னாள் பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதிய தலைவராக எஸ். ஆறுமுகம், செயலாளராக எஸ். குமாா், பொருளாளராக பி. சுரேஷ் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா். இவா்களுக்கு சங்க உதவி ஆளுநா் எஸ்.கே. வைத்தியநாதன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநா் எஸ். பாலாஜி பங்கேற்று, ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், தொழிலாளிக்கு சலவைப் பெட்டி, தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள், 500 மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.
இதில், முன்னாள் தலைவா்கள் துரை, சரவணன், பாலமுருகன், பாலாஜி, சுப்பு.சொா்ணபால், மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.