கரோனா தடுப்பூசி முகாம்
செம்பனாா்கோவில் அருகே மாத்தூா், முக்கரும்பூா் ஊராட்சிகளில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் அருகே மாத்தூா், முக்கரும்பூா் ஊராட்சிகளில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் முகாமை தொடக்கி வைத்தாா். இரண்டு ஊராட்சிகளிலும் 642 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், மருத்துவா் புவனேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ சித்திக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், தகவல் தொழில் நுட்பப் பிரிவு அணி அமைப்பாளா் ஸ்ரீதா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.