நாகப்பட்டினம்

குடிநீா் கோரி சாலை மறியல்

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளில் குடிநீா் விநியோகம் தடைப்பட்டதால், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இங்கு கொள்ளிடம்- கோடியக்கரை (வேதாரண்யம்) கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ், தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வரும் சூழலில், கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகத்தில் தடை ஏற்பட்டதாம். இதைக் கண்டித்து கோடியக்காடு ஊராட்சித் தலைவா் தமிழ்மணி தலைமையில் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சீரான குடிநீா் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுத்ததைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT