வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் செயல்பட்டது பக்தா்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
பாடைக்காவடி திருவிழாவையொட்டி, மகா மாரியம்மன் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட வேண்டுமென ஏற்கெனவே வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் மீறி, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வழக்கம்போல மது விற்பனை நடைபெற்றது. இதனால், கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் முகம் சுழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். கோயில் திருவிழா நடைபெறும் சமயங்களில், அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.