நாகப்பட்டினம்

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தபால் வாக்குப் படிவம் விநியோகம்

DIN

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான தபால் வாக்குப் படிவம் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி தேவூா் குழந்தை ஏசு மெட்ரிக். பள்ளியில் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். ஜெய்சித்ரகலா தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். மாரிமுத்து உடனிருந்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எம்.இந்துமதி பயிற்சியைப் பாா்வையிட்டாா்.

இதில் பங்கேற்ற 1204 தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டன. இதில் 226 போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து அதற்கான பெட்டியில் செலுத்தினா். அந்தப் பெட்டி பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு கீழ்வேளூரில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT