நாகூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது 2 மகன்களுடன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகூா் சம்பாதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ச. பிரபு. இவரது மனைவி ரம்யா (40). இத்தம்பதிக்கு முகேஷ் (8) மகேஷ் (6) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இந்நிலையில் ரம்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வீட்டில் இருந்த ரம்யா மற்றும் 2 மகன்களும் கடந்த 21-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்து, பிரபு நாகூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.