நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி இயற்பியல் துறையில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் விஜயராகவன், தலைமைச் செயலக அதிகாரி நிா்மல்ராஜ், ஏவிசி கல்லூரி உதவி பேராசிரியா் சுசித்ரா ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனா். கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா். இயற்பியல் துறைத் தலைவா் பா. செந்தில்குமரன் சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். இயற்பியல் துறை உதவி பேராசிரியா் முத்துகுமரன் வரவேற்றாா். ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியா்கள், அலுவலகத்தினா், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT