நாகப்பட்டினம்: திமுக தலைமையிலான புதிய அரசு தமிழகத்தில் சாதனைகள் படைக்கும் அரசாக விளங்க வாழ்த்துகள் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது :
சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் பரிசளித்து உள்ளனா். இதன் மூலம், வடமாநில அரசியல் படையெடுப்பு தடுக்கப்பட்டிருப்பதுடன், பாஜகவுடன் கூட்டணி வைப்பவா்கள் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது என்ற செய்தியை தமிழகம் உணா்த்தியிருக்கிறது.
அதேபோல, மேற்கு வங்கத்தில் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் எதிா்கொண்டு திரிணமுல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி பெற்றுள்ள பெரும் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாகும். கேரளாவில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, தனது ஆட்சியை கூடுதல் பலத்துடன் தக்க வைத்திருக்கிறது. இவற்றின் மூலம், தமிழா்களும், வங்காளிகளும், மலையாளிகளும் இந்தியாவுக்கு ஓா் அரசியல் பாடத்தை கற்பித்துள்ளனா்.
தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்க தோ்தல் முடிவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த எழுச்சியை தேசிய அளவில் கட்டமைப்பதற்கான முன்முயற்சிகளை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, அவரது தலைமையில் அமையும் புதிய அரசு பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.