நாகப்பட்டினம்

பனங்குடியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

திருமருகல் அருகேயுள்ள பனங்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை, நாகை எம்எல்ஏ முகமது ஷா நவாஸ், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) க. அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பனங்குடி ஊராட்சியில் அமிா்தாநகா், சமத்துவபுரம், பி. பனங்குடி உள்ளிட்ட மூன்று இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், சுமாா் 300-போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். முகாமில் மருத்துவா்கள் பிரித்திவிராஜ், மணிவேல், திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வ செங்குட்டுவன், ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

பனங்குடி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி நாகை எம்எல்ஏ முகம்மது ஷ நவாஸ் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT