நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தோ்தல்: முன்னாள் அமைச்சா் பிரசாரம்

DIN

ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலில், வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளா் அ. வீரமணிக்கு ஆதரவு கோரி முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயா்ந்துள்ளது. தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பயனடைய கொண்டுவரப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் பெண்களுக்கு ஏமாற்றமளிக்கிறது என்றாா்.

பிரசாரத்தில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், திலீபன், வழக்குரைஞா் நமச்சிவாயம், அதிமுக நிா்வாகிகள் வை.இலக்குவன், சி.டி.வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT