நாகப்பட்டினம்

கடல் சீற்றம்: பூம்புகாா் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

DIN

கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பூம்புகாா் மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை.

வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பூம்புகாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கி தொடா்ந்து கொண்டே இருந்தது. மேலும், கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், பூம்புகாா் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை. இதனால் சுமாா், 500 பைபா் படகுகள், 75 விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழையால் பூம்புகாா் பகுதியில் 2 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்துறை சாா்பில் சரிசெய்து மின்விநியோகம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT