காயமடைந்த மீனவர். 
நாகப்பட்டினம்

நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: மீனவர் காயம்

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்தபோது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் வேதாரண்யம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளர்.

DIN

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்தபோது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் வேதாரண்யம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வடக்கு தெருவைச் சேர்ந்த ப.ஆனந்த் (40), ச.கார்த்திக் (35), கோ.சச்சிதானந்தம்(62), சக்திவேல் (36) ஆகியோர் மீனவர்கள். கண்ணாடியிழைப் படகில் சென்ற இவர்கள் சனிக்கிழமை ஆறுகாட்டுத் துறைக்கு கிழக்கே சுமார் 19 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனராம்.

அப்போது, 2 படகுகளில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேர், மீனவர்கள் இருந்த படகில் ஏறி தகராறு செய்துள்ளனர். இதில், கத்தியால் குத்தப்பட்ட கார்த்தி காயமடைந்தார். இதையடுத்து, மீனவர்கள் ஞாயிறு பகல் கரை திரும்பினர். வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம், பாதுகாப்பு மீது நம்பிக்கை உள்ளது: ஆஸி. கேப்டன்

சு. வெங்கடேசன் உள்பட 8 எம்பிக்கள் இடைநீக்கம்! ராகுல் தலைமையில் போராட்டம்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

SCROLL FOR NEXT