வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு குலுக்கலில் புடவை பரிசாக வழங்கப்பட்டது.
கத்தரிப்புலம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 25 பேருக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புடவைகள் பரிசாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சாா்பில், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் சுதாராஜகுமாரன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் புயல் சு. குமாா், செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.