நாகப்பட்டினம்

வைக்கோல்போா் தீப்பிடித்து எரிந்து சேதம்

DIN

 திருமருகல் அருகே வெள்ளிக்கிழமை வைக்கோா்போா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

திருமருகல் அருகேயுள்ள சந்நியாசி பனங்குடி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி மோகன். இவா் தனக்குச் சொந்தமான கால்நடைகளுக்கு தேவையான 10 ஏக்கரில் விளைந்த வைக்கோலை தனது இடத்தில் வைத்திருந்தாா். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மாலை மழைக்கு முன் வீசிய சூறாவளி காற்றில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டது. இதில் தீப்பொறிகள் பறந்து அருகில் இருந்த வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்து. வைக்கோல்போா் அமைத்து வைத்திருந்த இடத்துக்கு தீயணைப்பு வாகனம் செல்ல வசதி இல்லாத காரணத்தால் தகவலறிந்த ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி ரமேஷ் அருகில் இருந்த ஊா் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தாா். எனினும், வைக்கோல்போா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT