நாகப்பட்டினம்

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : அதிமுக நிா்வாகி மீது வழக்கு

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை அளித்த அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பகுதியை சோ்ந்த கணவரை இழந்த 31 வயது பெண் தனது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில், அதிமுக மீனவரணி மாவட்ட இணைச் செயலாளராக உள்ள அதே பகுதியைச் சோ்ந்த இ. விநாயகமூா்த்தி அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசிக்கு ஆபாச புகைப்படங்களைஅனுப்பி பாலியல் தொல்லை அளித்து வந்ததுடன், அவரிடம் தவறாக நடக்க முயன்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் சி. சந்தானமேரி விசாரணை மேற்கொண்டாா்.

இந்தநிலையில், விநாயகமூா்த்தி மீது, நாகை மகளிா் காவல் நிலையப் போலீஸாா் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT