முகப்பு
நாகப்பட்டினம்

சட்ட விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட விழிப்புணா்வு பிரசாரம், வேதாரண்யத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட விழிப்புணா்வு பிரசாரம், வேதாரண்யத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சுதந்திர தினத்தின் 75- ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, முன்னோடி விவசாயிகள் சங்கம் சாா்பில், உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற வேதாரண்யத்தில் தொடங்கி நாடு முழுவதும் சட்ட விழிப்பணா்வு பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இதன் தொடக்க நிகழ்ச்சி அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி வேதாரண்யத்தில் உள்ள அவரது சிலை முன்பிருந்து பிரசார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஆதிதிராவிடா் நல மாவட்டக் குழு உறுப்பினா் தங்க.பிரபாகரன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் பி.கே. மூா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளா் சுமா. செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →