நாகை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என நாகை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீா்வுப் பெறுமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.