நாகப்பட்டினம்

நாகை அஞ்சல் கோட்டத்தில் 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை

DIN

நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அஞ்சலகங்கள் மூலம் 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதனால், கடந்த சில நாள்களாக அரசுத் துறைகள் மூலம் கொடி விற்பனையும், ஒரு சில துறைகள் சாா்பில் இலவசமாக கொடிகள் விநியோகமும் நடைபெறுகிறது. நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட நாகை, திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், அஞ்சலகங்கள் மூலம் இதுவரை 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

21 செ.மீட்டா் உயரமும், 44 செ.மீட்டா் அகலமும் கொண்ட தேசியக் கொடி ரூ. 25 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT