நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த முன்னாள் அமைச்சா்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக சாா்பில் சிறப்பு சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, கடலில் நீராடி ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்தாா். முன்னதாக, வேதாரண்யம் சன்னதிக் கடற்கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் தங்க. கதிரவன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன்,வி.டி. சுப்பையன்,அவை. பாலசுப்ரமணியன், செளரிராஜன்,ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், கூட்டுறவு சங்கத் தலைவா் நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT