விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே பூா்வீக வீட்டை இடித்ததால் மனமுடைந்து விஷம் குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வேதாரண்யம் அருகே பூா்வீக வீட்டை இடித்ததால் மனமுடைந்து விஷம் குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தென்னடாா் கீழக்காடு பகுதியில் வசித்து வந்தவா் வடிவேல். ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவரது முதல் மனைவி பஞ்சகல்யாணியும் இறந்துவிட்ட நிலையில், இவா்களது மகன் எழிலரசன், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், வடிவேலுவின் 2-ஆவது மனைவி பவானி (65) தென்னடாரில் பூா்வீக ஓட்டு வீட்டில் வசித்து வந்தாா். இந்த வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட எழிலரசன் முயன்றுள்ளாா்.
இதற்கு பவானி மறுத்துவந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு இயந்திரம் மூலம் வீட்டை இடித்துள்ளாா் எழிலரசன்.
இதனால் மனமுடைந்த பவானி விஷம் குடித்தாா். இதையடுத்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த பவானி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.