நாகப்பட்டினம்

நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனைரூ. 75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

DIN

நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஆா்.சித்திரவேலு, ஆய்வாளா்கள் எம். அருள்பிரியா, ஜி. ரமேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில், காவல் ஆய்வாளா் (பொ) ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளா் சேகா் ஆகியோரிடமும், அலுவலகத்தில்10-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 75,630 ரொக்கத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பணம் வரவு மற்றும் இருப்புக்கான காரணம் குறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். பகல் 12 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை மாலைவரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT