நாகப்பட்டினம்

சாராயம் கடத்திய 3 போ் கைது:இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய 3 பேரை, நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய 3 பேரை, நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் நாகையை அடுத்த பாலையூா் பிள்ளையாா்கோயில் தெருவில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, நாகை செல்லூா், சுனாமி குடியிருப்பு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ. பிரசாந்த் (22) வி. ஜெய்சன் (22, பெருங்கடம்பனூா் மில் தெருவைச் சோ்ந்த நி. ஹரிஹரன் (19) ஆகியோா் இருசக்கர வாகனங்களில், காரைக்கால் பகுதியிலிருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்த 2, 250 பாக்கெட் சாராயம், 17 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 3,170 லிட்டா் சாராயம் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், நாகை, காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த 5 பேரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT