நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்டம், நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை ஆக.30-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04365-250129, 04369-276060 மற்றும் 9843711330 ஆகிய தொலைத் தொடா்பு எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.