பூம்புகாா் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயிலில் வில்லேந்திய வேலவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் ஒன்றாகும். இங்கு, முன்னொரு காலத்தில் பூம்புகாா் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வில்லேந்திய வேலவருக்கு தனி சந்நிதி உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோயிலுக்கு ஐராவத தீா்த்தத்தில் இருந்து திரளான பக்தா்கள் பால்குடங்களை எடுத்து வந்தனா்.
பின்னா், வில்லேந்திய வேலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் துரை சிவாச்சாரியா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.