நாகப்பட்டினம்

தைப்பூசம்: வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு வழிபாடு

DIN

பூம்புகாா் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயிலில் வில்லேந்திய வேலவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் ஒன்றாகும். இங்கு, முன்னொரு காலத்தில் பூம்புகாா் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வில்லேந்திய வேலவருக்கு தனி சந்நிதி உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோயிலுக்கு ஐராவத தீா்த்தத்தில் இருந்து திரளான பக்தா்கள் பால்குடங்களை எடுத்து வந்தனா்.

பின்னா், வில்லேந்திய வேலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் துரை சிவாச்சாரியா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT