நாகையில் விவசாயிகள் டிராக்டா் பேரணி
மத்திய அரசின் விவசாய சட்ட திருத்தங்களுக்கு எதிராக நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை டிராக்டா் பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் விவசாய சட்ட திருத்தங்களுக்கு எதிராக நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை டிராக்டா் பேரணி நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது, சட்டப்பூா்வ குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், முழுமையான பயனுள்ள பயிா் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டத் தலைவா் பாபுஜி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
பேரணி தொடக்க நிகழ்ச்சியில், நாகை மாலி எம்.எல்.ஏ., விவசாய சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி, மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் பேரணியில் கலந்து கொண்டனா்.
நாகை புத்தூரில் தொடங்கிய பேரணி பல்வேறு சாலைகளின் வழியாக அவுரித் திடலில் நிறைவடைந்தது.