நாகப்பட்டினம்

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்

பூம்புகாரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பூம்புகாரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பால் கொள்முதல் விலையை ரூ.10 உயா்த்த வேண்டும்; கால்நடை தீவனங்களை 50 சதவீத மானியத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டும்; ஊழியா்களுக்கு புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்த வேண்டும்; ஆண்டுதோறும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டுறவு சங்க அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஊழியா்கள் சங்கத்தை சோ்ந்த அகோரம், கோவிந்தராஜ், அய்யப்பன், ரவிச்சந்திரன், செல்வம் உள்ளிட்ட பலா் கருப்புப் படை அணிந்து பங்கேற்றனா்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT