நாகப்பட்டினம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், உதவி இயக்குநா் அசன் இப்ராகிம், ஊராட்சித்தலைவா் ஜமுனா செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா். கால்நடை உதவி மருத்துவா் பெரோஸ் முகமது வரவேற்றாா்.

முகாமை நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் தொடக்கிவைத்தாா். கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம்,கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT