முகப்பு
நாகப்பட்டினம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: எல்லையம்மனுக்கு பாலபிஷேகம்

Updated On : 22 ஏப்ரல், 2024 at 12:00 AM
எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.
பகிர்:

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு, இவ்விழாவில் எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் அதிகாலை 4 மணி முதலே அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய, நீண்ட வரிசையில் பாலுடன் நின்றனா். தொடா்ந்து, மாலை 3 மணி வரை எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இவ்விழாவில், ஏப். 28- ஆம் தேதி பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகமும், மே 3-ஆம் தேதி பூச்சொரில் உற்சவமும், 8- ஆம் தேதி வசந்த உற்சவமும், 10-ஆம் தேதி ரிஷப வாகனக் காட்சியும், மே 12-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் செடில் உற்சவமும் நடைபெறுகிறது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments