நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: எல்லையம்மனுக்கு பாலபிஷேகம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு, இவ்விழாவில் எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் அதிகாலை 4 மணி முதலே அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய, நீண்ட வரிசையில் பாலுடன் நின்றனா். தொடா்ந்து, மாலை 3 மணி வரை எல்லை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
இவ்விழாவில், ஏப். 28- ஆம் தேதி பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகமும், மே 3-ஆம் தேதி பூச்சொரில் உற்சவமும், 8- ஆம் தேதி வசந்த உற்சவமும், 10-ஆம் தேதி ரிஷப வாகனக் காட்சியும், மே 12-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் செடில் உற்சவமும் நடைபெறுகிறது.
Advertisement