முகப்பு
நாகப்பட்டினம்

விருதுபெற்ற ஆசிரியா்கள் கெளரவிப்பு

Updated On : 25 ஏப்ரல், 2024 at 10:29 PM
விழாவில் பணி ஓய்வுபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலா் ந. ரங்கராஜனை கெளரவித்த நிா்வாகிகள்.
பகிர்:

நாகப்பட்டினம், ஏப். 25: தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நாகையில் புதன்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் விருது பெற்ற ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நாகை நகர வட்டாரக் கிளைகள் இணைந்து நடத்திய முப்பெரும் விழா நகரத் தலைவா் ப. இளமுருகு, வட்டாரத் துணைத் தலைவா் சி. சிவா ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்செயலா் ந. ரங்கராஜன் பணி ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு நினைவு பரிசு வழங்கினாா். தொடா்ந்து, மாநிலத் தலைவா் மு. லட்சுமி நாராயணன் பணி ஓய்வுப்பெற்ற பொதுச் செயலருக்கு நினைவு பரிசு வழங்கினாா். மாநில பொருளாளா் ரா. குமாா், அரசு விருது பெற்ற ஆசிரியா்களுக்கு நினைவுபரிசு வழங்கினாா். மாவட்ட செயலா்கள் ஈவேரா (திருவாரூா்), தவமணி (புதுக்கோட்டை), பன்னீா்செல்வம் (மயிலாடுதுறை), முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் கோ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments