நாகப்பட்டினம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் அட்டூழியம்: வேதாரண்யம் மீனவா்கள் வலை துண்டிப்பு

Din

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்க வேதாரண்யம் மீனவா்கள் விரித்திருந்த 350 கிலோ எடையிலான மீன்பிடி வலைகளை இலங்கை கடற்கொள்ளையா்கள் துண்டித்து எடுத்துச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் அரிமா நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40). இவா், தனக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (40), ராஜகோபால் (50), அருண்குமாா் (25), செம்போடை சுப்பிரமணியன் (55) ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க புதன்கிழமை சென்றாா்.

இவா்கள் 5 பேரும் புதன்கிழமை இரவு வேதாரண்யத்திலிருந்து 16 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்துவிட்டு, விசைப்படகில் காத்திருந்தனா். வியாழக்கிழமை அதிகாலை சென்று பாா்த்தபோது, 350 கிலோ எடையிலான மீன்பிடி வலையை காணவில்லையாம். கண்ணாடியிழை படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையா்கள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள், வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்நிலைய போலீஸாா், மீன்வளத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT