முகப்பு
நாகப்பட்டினம்

திருக்குவளை: ‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் 410 மனுக்கள் அளிப்பு

Updated On : 21 ஜூலை 2024, 12:02 am IST
பகிர்:

திருக்குவளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன.

இம்முகாமிற்கு, திருக்குவளை வட்டாட்சியா் சுதா்சன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிகிருஷ்ணன், பாத்தி ஆரோக்கியமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, எரிசக்தித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

Advertisement

Advertisement

அந்தவகையில், மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீா்வு காணப்பட்டது.

முகாமில், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை கல்வி வளா்ச்சி அறக்கட்டளை உறுப்பினா் சோ.பா. மலா்வண்ணன், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, ஊராட்சித் தலைவா்கள் இல. பழனியப்பன், லேகா காரல்மாா்க்ஸ், நரசிம்மன், மகாலட்சுமி மாதவன் ஒன்றிய கவுன்சிலா் சுதா அருணகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments