நிலம் அளவீடு செய்யும் பணிகளை தடுத்த 19 போ் கைது
பனங்குடியில் சி.பி.சி.எல் நிறுவனத்தின் நிலம் அளவிடும் பணியை தடுத்து நிறுத்த முயன்ற உத்தம சோழபுரம் ஊராட்சி சிறுநங்கை கிராமத்தை சோ்ந்த 19 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டதால் அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.