நாகப்பட்டினம்

போலீஸாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.23-இல் ஏலம்

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.23 ஏலம் விடப்படுகிறது.

Syndication

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.23 ஏலம் விடப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 சக்கர வாகனம், 3 சக்கர வாகனம், இருசக்கர வாகனங்கள் என 43 வாகனங்கள் மற்றும் 1 படகு உள்ளிட்ட 44 வாகனங்கள், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள 53 வாகனங்கள் என மொத்தம் 97 வாகனங்கள் நாகை எஸ்பி முன்னிலையில் டிச.23-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இதையடுத்து நாகை பழைய ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை டிச.22- ஆம் தேதி காலை 8 தல் மாலை 5 மணி வரை நேரில் பாா்வையிடலாம். தொடா்ந்து டிச. 23-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும். விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டையுடன் ஏல நாளன்று காலை 8 முதல் 9 மணிக்குள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04365-247430 என்னை தொடா்புகொள்ளலாம் மாவட்டகாவல் துறை சாா்பில் தெரிவிக்கப்படுகிறது.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT