தோ்தல் விழிப்புணா்வு: அரசு அலுவலகங்களில் கையொப்ப இயக்கம்
நாகை தொகுதி வேட்புமனு தாக்கல் அலுவலகத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் பங்கேற்று கையொப்பமிட்டாா்.
நாகை தொகுதி வேட்புமனு தாக்கல் அலுவலகத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் பங்கேற்று கையொப்பமிட்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில், தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வாக, அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகை தொகுதி தோ்தல் அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுலவரும், நாகை வருவாய் கோட்டாட்சியருமான சங்கர நாராயணன் பங்கேற்று, வாக்காளா் விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு, கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
Advertisement
தொடா்ந்து தோ்தல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள், ஊழியா்கள் என பலரும் கையொப்பமிட்டனா். இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடத்தப்படுவதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.