முகப்பு
நாகப்பட்டினம்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

நாகையில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:09 AM
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பெருள்கள் மற்றும் கைதான இருவா்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:33 PM

நாகையில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கஞ்சா, சாராயம், புகையிலைப் பொருகள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, வெளிப்பாளையம் ரயில் நிலையம், கடற்கரைச் சாலை, காடம்பாடி ஆகிய பகுதிகளில் போலீஸாா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை சோதனையிட்டனா்.

Advertisement

அதில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்த செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நாகை தெத்தி பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஜிம் (45), நாகை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செய்யது யூசுப் (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 60 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.