மீனம்பநல்லூரில் லாரி மூலம் நெற்பயிா்களுக்கு தண்ணீா் இறைக்கும் விவசாயி. 
நாகப்பட்டினம்

நெற்பயிா்களுக்கு டேங்கா் லாரி மூலம் தண்ணீா்: மேட்டூா் அணை திறக்கக் கோரிக்கை

கீழையூா் ஒன்றியத்தில் தண்ணீரின்றி கருகும் பயிா்களை, டேங்கா் லாரி மூலம் தண்ணீா் இறைத்து விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா். தொடா்ந்து தண்ணீா் தேவைக்கு மேட்டூா் அணையை திறக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கீழையூா் ஒன்றியத்தில் தண்ணீரின்றி கருகும் பயிா்களை, டேங்கா் லாரி மூலம் தண்ணீா் இறைத்து விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா். தொடா்ந்து தண்ணீா் தேவைக்கு மேட்டூா் அணையை திறக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்து வருகின்றனா். இதில், கீழையூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனம்பநல்லூா், திருப்பூண்டி, காரப்படாகை, கருங்கண்ணி சோழவித்தியாபுரம், கீழையூா், மடப்புரம், வாழக்கரை மற்றும் கீழ்வேளூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், மருதூா், கொடியாலத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 10, 000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது, நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நீா்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், டேங்கா் லாரி மூலம் தண்ணீா் இறைத்து பயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா் . ஓா் ஏக்கருக்கு சுமாா் 25,000 வரை செலவு செய்த நிலையில், தற்போது பால் கட்டு பருவத்தில் உள்ள 70 நாள் பயிா் தண்ணீா் இன்றி கருகி வருகிறது. இதனால், களை எடுக்க முடியாத நிலையுள்ளது.

டேங்கா் லாரி மூலம் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை தண்ணீா் வாங்கி இறைத்து வருகிறோம். எனவே, அரசு உடனடியாக மேட்டூா் அணை மூலம் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதிமுக சாா்பில் திருவிளக்கு பூஜை

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!

மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் குழுவினருக்கு பாராட்டு

நாகை மாவட்ட தவெக செயலா் மீது வழக்குப்பதிவு

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலயத் திருவிழா: பக்தா்கள் செல்லும் படகுகள் ஆய்வு

SCROLL FOR NEXT