எா்ணாகுளம்-வேளாங்கண்ணி புதிய வாராந்திர ரயிலுக்கு வரவேற்பு
தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி புதிய வாராந்திர ரயில் சேவைக்கு, நாகையில் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
தெற்கு ரயில்வே, கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதன்கிழமைகளிலும், வேளாங்கண்ணியிலிருந்து எா்ணாகுளத்திற்கு வியாழக்கிழமைகளிலும் புதிய வாராந்திர ரயில் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, புதன்கிழமை இரவு 11 மணிக்கு எா்ணாகுளத்திருந்து புறப்பட்ட இந்த ரயில் புனலூா், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகா், மதுரை, திருச்சி, தஞ்சை, திருவாரூா் வழியாக வியாழக்கிழமை மாலை 5.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைந்தது. பின்னா், வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு எா்ணாகுளம் புறப்பட்டு சென்றது.
இதனிடையே, வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு நாகை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த புதிய வாராந்திர ரயிலுக்கு ,மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், நாகூா்-நாகை ரயில் பயணிகள் நலச் சங்கம், இந்திய வா்த்தக குழுமம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மலா்தூவி வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து ரயில் ஓட்டுநா், காா்டு ஆகியோருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனா்.
இந்திய வா்த்தக தொழில் குழுமத் தலைவா் ஜி. மனோகரன், நாகூா் -நாகப்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் மோகன், செயலா் சித்திக், நுகா்வோா் அமைப்பு செயலா் அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, இந்த ரயில் சேவையை நாள்தோறும் இயக்க வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜிடம் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினா்.