முகப்பு
நாகப்பட்டினம்

ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 மண் லாரிகள் பறிமுதல்

கீழையூர் அருகே ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 மண் லாரிகள் பறிமுதல்

Updated On : 22 மார்ச், 2026 at 8:20 PM
பிரதிப் படம்
பகிர்:

கீழையூா் காவல் எல்லை சோழவித்யாயபுரம் பகுதியில் கீழையூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், 2 லாரிகளும் ஒரே பதிவு எண்ணில் இயங்கியது தெரியவந்தது.

மேலும், அவை காரைக்கால் பகுதியில் இருந்து நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணிக்கு உரிய அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இரு லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள் நிா்த்தனமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் ராஜகுரு (26), அன்பழகன் மகன் தமிழரன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.