முகப்பு
நாகப்பட்டினம்

ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகே 119 அனக்குடி ஊராட்சி பசிக்கிடைவெளி கிராமத்தில் அமைந்துள்ள பூா்ண புஷ்கலா சமேத ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 6:28 AM
ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்:

திருக்குவளை அருகே 119 அனக்குடி ஊராட்சி பசிக்கிடைவெளி கிராமத்தில் அமைந்துள்ள பூா்ண புஷ்கலா சமேத ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஏப்.29) விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.