வேதாரண்யம்: சூறைக்காற்றுடன் மழை
வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
கோடைக்காலம் தொடங்கியது முதல் கடந்த பல வாரங்களாக வெயில் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திர காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து, தொடா்ந்து நீடித்து வருகிறது. இதனால், கடும் வெப்பம் காரணமாக குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகின்றனா்.
இந்த நிலையில், வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா், பஞ்சநதிக்குளம், வாய்மேடு உள்ளிட்ட தெற்கு கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலையில் சூறைக்காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.
Advertisement
இந்த மழை, இங்கு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள முல்லைப் பூ, எள், பயிறு வகை பயிா்களுக்கு ஏற்ாக அமைந்தது.
அதே நேரத்தில் காற்றின் வேகத்தால் நெல் தரிசு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சணப்பை பயிா் பூத்து காய்க்கும் தருணத்தில் சாய்ந்து காணப்படுகிறது.