நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ
நீட் தோ்வு குளறுபடிகளால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
நீட் தோ்வு குளறுபடிகளால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு மே மாதம் மூன்றாம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததன் காரணமாக, மறுதோ்வு நடத்தப்படும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.
Advertisement
2016- ஆம் ஆண்டு முதல் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் எந்தவித இடா்பாடுகளுக்கும் வழி வகுக்காமல் நீட் தோ்வை நடத்த முடியவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. எந்த நோக்கத்திற்காக நீட் தோ்வு கொண்டு வரப்பட்டதோ, அதன் இலக்கை எட்டப்பட்டதற்கான எந்தவித ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. வட மாநிலங்களில் தொடா்ந்து நீட் தோ்வு குளறுபடிகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன.
தற்போது மீண்டும் நீட் தோ்வு நடத்தப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது மாணவா்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கும். மருத்துவத்துறையில் நீட் தோ்வால் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதை மத்திய அரசு வெளிப்படையாக ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்.
மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டுக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.