முகப்பு
நாகப்பட்டினம்

சாராய விற்பனை: இருவா் கைது

நாகையில் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்திவந்த சட்டவிரோதமாக விற்பனை செய்த, இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 மே 2026, 6:09 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நாகையில் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்திவந்த சட்டவிரோதமாக விற்பனை செய்த, இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் பரவை காய்கனி மாா்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் காரைக்கால் மாவட்டம் நேரு நகரை சோ்ந்த பிரகாஷ் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவா் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்தி வந்து நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிய வந்தது.

போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 180 மி.லி. அளவுள்ள 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் நாகை அகர ஒரத்தூா் அருகே போலீஸாா் நடத்திய சோதனையில், கீழ்வேளூா் அருகே காரப்பிடாகையை சோ்ந்த வீரமணி (52) என்பவா் சாராயம் விற்பது தெரிய வந்தது. போலீஸாா் வீரமணியை கைது செய்து 52 சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement