பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்:பார்வை குறைபாடு மாணவிக்கு பாராட்டு
பிளஸ் 2 பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதி 1159 மதிப்பெண்கள் பெற்ற கண் பார்வை குறைபாடுடைய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதி 1159 மதிப்பெண்கள் பெற்ற கண் பார்வை குறைபாடுடைய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் பெசண்ட் நகரை சேர்ந்தவர் ஜோ பிரேரா மகள் பியானா பிரேரா. பார்வை குறைபாடு உள்ள இவர் பிளஸ் 1 வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவிட்டு, பிளஸ் 2 தேர்வை தனித் தேர்வராக எழுதினார். இதில் அவர் 1200-க்கும் 1159 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரின் மதிப்பெண்கள்:
பிரெஞ்ச் - 194, ஆங்கிலம் - 182, பொருளாதாரம் - 198, அரசியல் அறிவியல் - 187, வணிகவியல் - 198, அக்கவுண்டன்ஸி - 200.
Advertisement
Advertisement
"கல்லூரி விரிவுரையாளராக விரும்புகிறேன். அதற்கேற்ற கல்வியை தேர்வு செய்து படிப்பேன்' என்கிறார் பியானா.
இதுகுறித்து மாணவியின் தந்தை கூறும்போது, பார்வை குறைபாடு உள்ள பியானா, பிளஸ் 1 வகுப்பில் கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்ததால், பிளஸ் 2 பொதுத் தேர்வை இந்தப் பாடத்தில் எழுதுவது கடினம் என பள்ளி நிர்வாகம் கூறியதால், தனித் தேர்வராக வேறு பிரிவை எடுத்து படித்தார். தற்போது 1159 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனித் தேர்வர்களின் திறமையையும் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
மாணவியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் காளிதாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டினர்.