திருவாரூர்

வெளிமாநில மது விற்ற 33 பேர் கைது

DIN

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வெளி மாநில மது விற்ற 33 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலைய போலீஸார் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் கானூர், ஸ்ரீவாஞ்சியம், பெரும்புகளூர், பெரிய குருவாடி, மேட்டுப் பாளையம், மடப்புரம், மேலகொற்கை, மன்னார்குடி, எடையூர்சங்கேந்தி, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாராய சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் உரிய அனுமதியின்றி வெளி மாநில மதுபானம் மற்றும் சாராயம் விற்ற தண்டாந்தோப்பு பிரகாஷ், ராம், வடகண்டம் திருஞானம், மன்னார்குடி சாவித்ரி உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 234 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர மதுபானக் கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் யாரேனும் மது குற்றங்களில் ஈடுபட்டால் கடும் சட்ட நடவடிக் கை மேற்கொள்ளப்படுமென்றும், சாராயம் எங்கேயாவது விற்பனை செய்தால் பொது மக்கள் 83000 87700 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT