மன்னார்குடி நகர முடிதிருத்துவோர் நலச் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்துக்கு சிறப்பு தலைவர் வி.டி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் என். ஞானசுந்தரம் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவராக எஸ்.கே. முருகேசன், செயலர் வி. மனோகரன், பொருளாளர் என்.தமிழரசன், துணைத் தலைவர் டி.முகில் நடராஜன், துணைச் செயலர் கே.மகேஷ், அமைப்பாளர் கே.தியாகராஜன், ஆலோசகர் ஆர்.பாஸ்கர், இளைஞரணி தலைவர் டி.முரளிதரன், செயலர் டி.ரமேஷ், பொருளாளர் எஸ்.அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.