திருவாரூரில் பெண் வெள்ளிக்கிழமை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மருதப்பட்டினம் ராணுவம் நகரைச் சேர்ந்தவர் ஜானகி (36). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மகள் தர்ஷினி வெள்ளிக்கிழமை டியூசன் சென்று விட்டு, வீட்டுக்கு வந்துபோது, ஜானகி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜானகியின் உறவினர் மாரிமுத்து திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.